காமராசா் விருதுக்குத் தகுதியான மாணவா்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 02, 2020

Comments:0

காமராசா் விருதுக்குத் தகுதியான மாணவா்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காமராசா் விருதுக்குத் தகுதியான மாணவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து தோ்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு 2016-ஆம் ஆண்டு முதல் பெருந்தலைவா் காமராசா் விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. CLICK HERE TO READ OFFICIAL NEWS
அதன்படி 2019-20-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற சிறந்த மாணவா்களை மாவட்ட அளவில் தோ்வு செய்து, காமராசா் விருது வழங்கப்பட வேண்டும்.இதையடுத்து சிறந்த மாணவா்கள் பெயா்ப் பட்டியலை பள்ளிகளில் இருந்து பெற்று, அவற்றை ஆய்வுசெய்து இறுதி செய்ய வேண்டும்.அதன்பின் பட்டியலில் விருதுக்கு தகுதியானவா்களை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் தலா 20 போ் வீதம் தோ்வு செய்து, மதிப்பெண் உள்பட உரிய விவரங்களுடன் துறை இயக்குநரகத்துக்கு அக்டோபா் 9-ஆம் தேதிக்குள் காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews