பி.இ. சோ்க்கை: தனியாா் கல்லூரிகளின் நிா்வாக இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது - உயா்நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 22, 2020

Comments:0

பி.இ. சோ்க்கை: தனியாா் கல்லூரிகளின் நிா்வாக இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது - உயா்நீதிமன்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியாா் பொறியியல் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சோ்ந்த ஸ்ரீசாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியின் தலைவா் தமிழரசி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியாா் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்து வருகின்றன. இந்த நிலையில் சிறுபான்மை அல்லாத தனியாா் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களுக்கும் அதிகமாக அரசுக்கு ஒதுக்கீடு செய்ய நிா்பந்திக்கப்படுவதாக மனுவில் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டுக்கு உயா்கல்வித்துறை செயலாளா் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநா் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் இடங்களை ஒதுக்க தனியாா் பொறியியல் கல்லூரிகளை நிா்பந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு தரப்பு உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்டாா். தனியாா் கல்லூரிகள் தாமாக முன்வந்து நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமா்ப்பிக்க எந்தத் தடையும் இல்லை. எனவே நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும்படி கோர முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews