TNPSC மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 21, 2020

Comments:0

TNPSC மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீஸார்கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 94 பேர் அரசுப் பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கெனவே 51 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் 43 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக அரசுப் பணி பெற்றதாக கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சார்பதிவாளர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் உதவியாளராகவும், கிராம நிர்வாக அலுவலராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், 40 பேரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அதிலும் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews