தமிழகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், 'சி.சி.டி.என்.எஸ்.,' பராமரிப்புக்கு புதிதாக ஆட்கள் நியமிக்கப்படாததால், ஆயிரக்கணக்கான வழக்கு விபரங்கள், முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாமல் தேங்கியுள்ளன.
குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காணும் வகையில், 'கிரைம் அண்ட் கிரிமினல் டிராக்கிங் நெட்ஒர்க் சிஸ்டம்ஸ்' - சி.சி.டி.என்.எஸ்., - எனும், குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் வலை பின்னல் முறை, நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில், குற்ற வழக்குகள், குற்றவாளிகள் விபரம், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, நீதிமன்றத்தில் வழக்குகளின் நிலை ஆகியவை, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதன் மூலம், தென்மாநிலத்தை சேர்ந்த ஒரு குற்றவாளி, வட மாநிலத்தில் கைது செய்யப்படும் போது, அவரது குற்றச் செயல்கள் குறித்து கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில், 2013 முதல் இது நடைமுறையில் உள்ளது. ஐந்து வழக்குகள்ஆனால், குற்ற வழக்குகளை கணினியில் பதிவு செய்ய, புதிதாக ஆட்களை தேர்வு செய்யாமல், ஏற்கனவே போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களே பணியாற்றி வருகின்றனர்.நாள்தோறும் பதிவாகும் வழக்குகள், நீதிமன்றத்தில் வழக்கின் நிலை உள்ளிட்ட, அனைத்து விதமான விபரங்களையும், பதிவேற்றம் செய்ய முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: சி.சி.டி.என்.எஸ்., நடை முறைக்கு வரும் முன், ஸ்டேஷன்களில் குற்ற விபரங்கள், முதல் தகவல் அறிக்கைகளை, போலீசார் கையால் எழுதி வந்தனர். இந்த முறை அமல்படுத்தப்பட்ட போது, கணினியில் பதிவு செய்ய, புதிதாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே, போலீஸ் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு, மாற்று பணி என்ற முறையில், கணினி பயிற்சி கொடுத்து, ஸ்டேஷனில் நியமிக்கப்பட்டனர். இதில், பெண் போலீசார் தான் ஆர்வமாக வந்தனர். நாள் முழுதும், ஸ்டேஷனில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பதால், அவர்களும் சில, மாதங்களிலேயே பழைய பணிக்கு சென்று விடுகின்றனர். மேலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும், ஒரு கணினி தான் உள்ளது. தினமும், குறைந்தபட்சம், ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
மேலும், குற்றப்பத்திரிகை விபரம், புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்படாத வழக்குகள், ஒரு வழக்கின் நீதிமன்ற நடவடிக்கை - தீர்ப்பு வரும் வரை - ஆகிய விபரங்களை தினமும் பதிவேற்ற வேண்டும். நிரந்தர நியமனம்இந்த அனைத்து பணிகளையும், செய்ய முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். இதனால், தமிழகம் முழுதும், 1,800க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், ஆயிரக்கணக்கான வழக்கு விபரங்கள், முழுமையாக பதிவேற்ற முடியாமல் தேங்கிஉள்ளன. எனவே, சி.சி.டி.என்.எஸ்., மூலம் குற்றப் பதிவேடுகளை பராமரிக்க, கணினி படித்தவர்களை, புதிதாக தேர்வு செய்து, நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.