போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர் 'டிஸ்மிஸ்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 28, 2020

Comments:0

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர் 'டிஸ்மிஸ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போலி சான்றிதழ் கொடுத்து, அரசு பணியில் சேர்ந்தவர், பணி நீக்கம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணம்பூண்டியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. திருக்கோவிலுார் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர், 2007ல் இறந்தார்.இதையடுத்து, கருணை அடிப்படையில், அவரது மகன் ஏழுமலை, 35என்பவருக்கு அரசு பணி வழங்கப்பட்டது.திருக்கோவிலுார் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக, 2008ல் சேர்ந்தார். தற்போது, சங்கராபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், ஏழுமலையின், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை குறித்த ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலி என கண்டறியப்பட்டது. இதுகுறித்து, சங்கராபுரம் உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் அளித்த புகார்படி, சங்கராபுரம் போலீசார், ஏழுமலையை தேடி வருகின்றனர்.இதற்கிடையே, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஏழுமலையை நிரந்தர பணி நீக்கம் செய்து, நெடுஞ்சாலைத் துறை சென்னை, முதன்மை இயக்குனர் உத்தரவிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews