22-ந் தேதி என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதி செமஸ்டர் அரியர் தேர்வு தொடங்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

22-ந் தேதி என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதி செமஸ்டர் அரியர் தேர்வு தொடங்கும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
என்ஜினீயரிங் படிப்பு மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு வருகிற 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் 2012-ம் ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்து இறுதி பருவத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் படித்து முடித்து இருக்கும் அரியர் மாணவர்களுக்கும், அதேபோல் வருகிற 22-ந் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக 22-ந் தேதி ‘பிராஜெக்ட்’ மற்றும் நேர்காணல் தேர்வு (வைவா வோஸ்) நடைபெறும் என்றும், 24-ந் தேதி முதல் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் வருகிற 15-ந் தேதி காலை 10.30 மணி முதல் 17-ந் தேதி மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பாடப்பிரிவுகளுக்கான விரிவான தேர்வு அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி என்று அரசு அறிவித்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, அதனை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த பிரச்சினை தொடர்ந்து நீண்டுகொண்டு இருக்கும் நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் இறுதி பருவத்தேர்வில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews