வேளாண் பல்கலைக்கழகத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

வேளாண் பல்கலைக்கழகத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் இதன் கீழ் உள்ள 14 உதவி கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளின் சேர்க்கைக்காக இதுவரை 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் அனைத்துமே இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்தாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) ஆகியோர் ஆய்வு செய்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews