மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் : அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، سبتمبر 23، 2020

Comments:0

மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் : அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விவரத்தை வருகிற 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2020-21ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரையில் வருகிற 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS
தொடர்ந்து, இந்த விவரங்களை தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமென கடந்த மாதம் அமைச்சர் அறிவித்திருந்தார். அதாவது கொரோனா காரணமாக இந்த வருடம் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை. CLICK HERE TO READ OFFICIAL NEWS இதையடுத்து பொருளாதார நிலைமை கேள்விக்குறியானதால் பல்வேறு தரப்பினரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவு அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கையானது தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة