அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா? பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் -(RTI LETTER ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா? பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் -(RTI LETTER )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தகவல் அறியும் உரிமைச் பணியாளர் மற்றும் நிருவாகச்சீர்திருத்தத் (அவி-IV) துறை,
தலைமைச் செயலகம், சென்னை - 600 009.
திருவள்ளுவர் ஆண்டு 2051.
கடித எண் 21881/ அவி IV/2020 1, நாள், 16.09.2020
அனுப்புநர்
திரு.எம். ஸ்ரீதரன், பி.எஸ்.சி., பி.எட்., எம்....
பொதுத் தகவல் அலுவலர் மற்றும்
அரசு சார்புச் செயலாளர்,
பெறும்
Dr ராம்பிரசாத், M.B.B.S,
60A, 2வது தெரு,
கோவிந்தராஜபுரம்,
நந்திவரம், கூடுவாஞ்சேரி,
செங்கற்பட்டு மாவட்டம் - 603 202.
ஐயா,
பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விளக்கம் / தெளிவுரை கோரியது பதில் அனுப்புதல் - தொடர்பாக.
பார்வை: தங்களின் 09.08.2020 நாளிட்ட மனு, இத்துறையில் பெறப்பட்ட நாள் 10.09.2020.
பார்வையில் காணும் மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அம்மலுவில் தாங்கள் கோரியுள்ளவற்றிற்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.
வ.எண்.1 குறித்து:- அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்(அவி-IV)துறை, நாள்.10.03.2020-ல் பத்தி 6(1)-ன் படி அவ்வாணை ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வ.எண்.2 குறித்து:-
பள்ளிக் கல்வி இயக்குநர் அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் (அவி-IV) துறை, நாள். 10.03.2020 ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது. மேலும், இத்துறையின் இசைவு பெறாமல் மேற்சொன்ன தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். வ.எண்.3 குறித்து:-
மேற்குறிப்பிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறையால் கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews