அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பா? கல்வியமைச்சர் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பா? கல்வியமைச்சர் பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பா? கல்வியமைச்சர் பதில்
கோபிச்செட்டிப்பாளையம், செப்.13 அரசுபள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் இது வரை புதிதாக அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கோபிசெட்டி பாளையத்தில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதியில் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த ஆண்டு 238 மையங்களில் 1.17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர். வரும் 5 தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை வந்தால் தகவல் தெரிவிக்கிறேன். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews