அக்னி 'பரீட்சை!' தொற்று உயரும் நேரத்தில் தேர்வா?: இறுதியாண்டு மாணவர்கள் அச்சம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 09, 2020

அக்னி 'பரீட்சை!' தொற்று உயரும் நேரத்தில் தேர்வா?: இறுதியாண்டு மாணவர்கள் அச்சம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவையில், வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது. நேரடி தேர்வுக்கு மாற்றாக, ஆன்லைன் தேர்வு முறையை பரிசீலிக்க வேண்டும் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து, பிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு வரும், 15ம் தேதிக்கு மேல் நடத்தப்படும் என்றும், மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வை மாணவர்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து தான் எழுத வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.பெற்றோரின் அச்சமும் தயக்கமும்இந்த அறிவிப்பால் தமிழகத்தை தவிர்த்து, பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேர்வு எழுத மாணவர்களை பெற்றோர் அனுப்ப தயங்கி வருகின்றனர்.இது குறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், 'கல்லுாரிகளில் இருந்து தேர்வு தொடர்பான விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. விடுதி மாணவர்கள் வரும், 11 அல்லது, 12ம் தேதிக்குள் விடுதிக்கு வருகை தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், மாணவர்களை அனுப்பி வைக்க அச்சமாக உள்ளது' என்கின்றனர்.இ-பாஸ் சிக்கல் ஏற்படும்கோவை கல்லுாரிகளில் லட்சக்கணக்கான வெளி மாநில மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிகள், வீடுகளை காலி செய்து விட்டனர். இந்நிலையில், திடீரென தேர்வுக்கு வருமாறு வந்துள்ள அழைப்பு, குழப்பத்தை அளித்துள்ளது.வெளி மாநிலங்களில் இருந்து வருவோர், இ-பாஸ்' பெற்றாக வேண்டும். தேர்வு முடிந்து மீண்டும் சென்றால், இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன.ஆகவே, நேரடியாக தேர்வு நடத்துவதற்கு பதிலாக, ஆன்லைனில் நடத்தலாம். ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு, 'சப்ளிமென்டரி' தேர்வுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கின்றனர் பெற்றோர்.தனியார் கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறுகையில், 'அரசு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அறிவுறுத்தினால், அதற்குரிய 'சாப்ட்வேர்' உள்ளிட்ட ஏற்பாடுகளை, தயாராக வைத்துள்ளோம்' என்றனர்.சமூக இடைவெளி எனும் சவால்கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி(ஜி.சி.டி.,) முதல்வர் தாமரையிடம் கேட்டபோது, ''நோய் தொற்று அச்சம், அனைவரிடமும் உள்ளது. அரசு அறிவிப்புக்கு ஏற்ப, தேர்வு முறை குறித்து முடிவு செய்யப்படும். வடமாநில மாணவர்கள் எப்படி வந்து சேருவார்கள் என தெரியவில்லை.தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இருந்து, மாணவர்கள் கோவை வர வேண்டும். சமூக இடைவெளியை விடுதிகளில் பின்பற்றுவது, சற்று சவாலான விஷயம் தான். 'ஆன்லைன்' முறையில் தேர்வு நடத்த அறிவுறுத்தினால், அதற்கும் தயாராக உள்ளோம். அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்.இறுதியாண்டு மாணவர்களுக்கு, தேர்வு நடத்துவது தான் எங்கள் முதல் நோக்கம். இவர்கள் உடனடியாக வேலையில் சேர வேண்டிய நிலையில் உள்ளனர். எங்களது கல்லுாரியில், 80 சதவீத மாணவர்கள், வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்று, வேலை கிடைத்துள்ளது,'' என்றார்.விரைவில் நல்ல முடிவுபாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜிடம் கேட்டபோது, ''எவ்வாறு தேர்வு நடத்துவது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். விரைவில் இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், இப்போது தேர்வு நடத்தினால், அனைத்து மாணவர்களும் பங்கேற்பது சிரமம். ஆகவே, மாணவர்களின் பாதுகாப்பு, வசதி கருதி அரசு சரியான முடிவு எடுக்க வேண்டும்.சமூக இடைவெளியை மாணவர் விடுதிகளில் பின்பற்றுவது, சற்று சவாலான விஷயம் தான். 'ஆன்லைன்' முறையில் தேர்வு நடத்த அறிவுறுத்தினால், அதற்கும் தயாராக உள்ளோம். அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்.-தாமரை, முதல்வர் கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி நேரடியாக தேர்வு நடத்துவதற்கு பதிலாக, ஆன்லைனில் நடத்தலாம். ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு, 'சப்ளிமென்டரி' தேர்வுக்கு வாய்ப்பளிக்கலாம். அல்லது தேர்வை தள்ளி வைக்கலாம் என்று கோரிக்கை விடுக்கின்றனர் பெற்றோர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews