புதுச்சேரி மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகம் அரசாணை வெளியிடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 07, 2020

புதுச்சேரி மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகம் அரசாணை வெளியிடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகத்துக்கான அரசாணை ஆசிரியர் தினமான நேற்று வெளியிடப்பட்டது.
புதுவை மாநிலத்துக்கு என்று தனியாக பல்கலைக்கழகம் எதுவும் இல்லை. எனவே இதுகுறித்த கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த காலங்களில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையொட்டி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்து அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. அதாவது 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வரும் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்ற அரசு முயற்சி எடுத்து அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தொடங்க சமீபத்தில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தினமான நேற்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக உயர்கல்வித்துறை செயலாளர் அன்பரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின்படி புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் முதல்கட்டமாக புதுவை அரசு நடத்தும் 2 என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ.க்கள் வர உள்ளன. பிற்காலத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ்வர வாய்ப்பு உள்ளது. புதுவை என்ஜினீயரிங் கல்லூரி காலாப்பட்டில் தற்போது செயல்பட்டு வருகிறது. சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இங்கு விரைவில் பல்கலைக்கழகத்துக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. ஏற்கனவே மத்திய பல்கலைக்கழகம் இருந்தாலும் தற்போது தொடங்கப்பட உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகமே புதுச்சேரியின் முதல் மாநில பல்கலைக்கழகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews