மின் வாரிய வேலை: 2 லட்சம் பேர் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، سبتمبر 16، 2020

Comments:0

மின் வாரிய வேலை: 2 லட்சம் பேர் எதிர்பார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, இரண்டு லட்சம் பட்டதாரிகள், மின் வாரியம், தேர்வை எப்போது நடத்தும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழக மின் வாரியம், 500 இளநிலை உதவியாளர் - கணக்கு, 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர் பதவிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, விருப்பமுள்ள பட்டதாரிகளிடம் இருந்து, நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.உதவியாளர் - கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பேர்; கணக்கீட்டாளருக்கு, 79 ஆயிரம் பேர்; உதவி பொறியாளர் பதவிக்கு, 1.03 லட்சம் பேர் என, மொத்தம், 2.14 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, மே மாதத்திற்குள், கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்க முடிவு செய்யப்பட்டது.தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால், மின் வாரியத்தால்,திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிய வில்லை. இம்மாதம் முதல், ஊரடங்கில்பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:மற்ற துறைகளை விட, மின் வாரிய தேர்வு வெளிப் படையாகவும், நேர்மையாகவும் உள்ளது. இம்மாதம், 'இ -- பாஸ்' ரத்து உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல், மின் வாரியம், விரைவாக எழுத்து தேர்வு நடத்தி, ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு நடத்த மேலும் தாமதம் ஏற்படும் என்றால், அதற்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்க முடியும். தேர்வு குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை மீண்டும் வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة