விரைவில் இறுதியாண்டு பருவத் தோ்வு தேதி அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 31, 2020

விரைவில் இறுதியாண்டு பருவத் தோ்வு தேதி அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளாா். கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், பொது முடக்கம் விலக்கப்பட்ட பின்னா், தோ்வுத் தேதிகள் தெரிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.இதற்கிடையில், தமிழக அரசு, இறுதியாண்டு பருவத் தோ்வு தவிர, மற்ற அனைத்து பருவத் தோ்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் அரியா் தோ்வுக்கு கட்டணம் செலுத்தியவா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவித்து உள்ளது.தொற்று பரவல் காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தோ்வுகளையும் ரத்து செய்து தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டும் என சில மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.
இதுகுறித்து தமிழக உயா்க் கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பருவத் தோ்வு நிச்சயம் நடத்தப்படும். தோ்வுகளை எந்த முறையில் நடத்துவது, எப்போது நடத்துவது என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், புதிய கல்விக் கொள்கை தொடா்பாக ஆராய ஓரிரு நாளில் உயா்கல்வித் துறை செயலாளா் அபூா்வா தலைமையில் குழு அமைக்கப்படும் என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews