'எஸ்.ஐ., தேர்வு விடைத்தாள் செல்லாது' - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 30, 2020

'எஸ்.ஐ., தேர்வு விடைத்தாள் செல்லாது' - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'எஸ்.ஐ., எழுத்துத் தேர்வுக்கான பதில்கள் குறித்து, இரண்டாம் முறையாக வெளியிடப்பட்ட விடைத்தாள் செல்லாது. மனுதாரர்களை அடுத்த கட்ட தேர்விற்கு அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ் தாக்கல் செய்த மனு:ஜன., 12ல் எஸ்.ஐ., எழுத்துத்தேர்வு எழுதினேன். அதில், '1947க்கு பின் இந்திய நாணயம், எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது' என கேள்வி இருந்தது. அதற்கு, மூன்று முறை என்பதே சரியான விடை. சரியான விடை எழுதியதால், முதலில் வெளியான விடைத்தாள், 'கீ ஆன்சர்'படி எனக்கு, 48.5 மதிப்பெண் கிடைத்தது. ஆனால், திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட விடைத்தாளில் பண மதிப்பிழப்பு, நான்கு முறை செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர். எனக்கு, 48 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால், பணி வாய்ப்பு பறிபோனது. கடந்த, 2016ல் நடந்த பண மதிப்பிழப்பை, 'பண மதிப்பு குறைப்பு' என கருதியுள்ளனர். சரியான பதில் அளித்த என்னை, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார். இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:இதுவரை, மூன்று முறை தான், பண மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2016ல் நடந்தது, 500 - 1,000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை. இதையும் சேர்த்து, நான்கு முறை என்பது, தவறான கருத்து. இதனால், பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டு, வாய்ப்பு பறிபோயுள்ளது. எனவே, அந்த விடைத்தாள் செல்லாதது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள்ளதால், 0.5 மதிப்பெண் வழங்கி, அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்க வேண்டும். இந்நடைமுறைகளை, இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews