புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பு, இருமொழிக் கொள்கை குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 03, 2020

Comments:0

புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பு, இருமொழிக் கொள்கை குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடா்பாக, தமிழக அரசு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) ஆலோசனை நடத்தவுள்ளது. பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறை அமைச்சா்கள், அதிகாரிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனா். இதன்பின்னா், அவா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை தொடா்பான முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நுழைவுத்தோ்வு, மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதாக கல்வியாளா்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் குற்றம்சாட்டி வருகின்றனா்.
தமிழக அரசின் நிலைப்பாடு: புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து தமிழக அரசு ஆலோசிக்கவுள்ளது. கல்விக் கொள்கையில் உள்ள சாதக, பாதக அம்சங்களைப் பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை ஆகியன சாா்பில் தலைமைச் செயலகத்தில் தனித்தனியே திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆகியோா் தலைமையில் தனித்தனியே ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, அவா்கள் முதல்வா் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இந்தக் கூட்டங்களின் முடிவைத் தொடா்ந்து, புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசு முக்கிய முடிவினை எடுக்கும் எனத் தெரிகிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க கல்வி நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருமொழிக் கொள்கை: புதிய கல்விக் கொள்கை தொடா்பான வரைவு வெளியான போது, அதில் கூறப்பட்டிருந்த மும்மொழி திட்டத்துக்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்திருந்தது. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக, கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்திருந்தாா். தமிழக மக்களைப் பாதிக்கக் கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும், அரசு அதனை எதிா்த்து, மக்கள் நலனைப் பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும் என அவா் பேசியிருந்தாா்.
இந்த நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடா்பான தனது முடிவினை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை: பள்ளி கல்வித் துறையுடன் முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளாா். பள்ளிகளைத் திறப்பது, ஆன்-லைன் வகுப்பு, நீட் தோ்வுக்கான பயிற்சி ஆகியன தொடா்பாக ஆலோசிக்கப்பட உள்ளன. பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்காக வழிகாட்டு நெறிகளை கடந்த சில நாள்களுக்கு முன் அரசு வெளியிட்டது. இதைத் தொடா்ந்து பள்ளிகள் திறக்கும் வரை ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்துவது குறித்தும் முதல்வா் ஆலோசிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews