ஆன்லைன் பாட வகுப்பு புரியாததால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!: ஆண்டிபட்டியில் துயரம்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 19, 2020

Comments:0

ஆன்லைன் பாட வகுப்பு புரியாததால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!: ஆண்டிபட்டியில் துயரம்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் சூழலில் தற்போது ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் பாட வகுப்பு புரியாததால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பரமப்பட்டியை சொந்த ஊராக கொண்டவர் பாண்டி. இவர் கட்டிட பணியில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது மகன் அபிஷேக் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடப்பாண்டில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே அபிஷேக் பாடங்களை கற்று வந்துள்ளார். பள்ளியின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பு தனக்கு புரியவில்லை என மாணவர் அபிஷேக் தொடர்ந்து தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளார். இருப்பினும் அவர் பெற்றோர் பாடங்களை ஒழுங்காக படிக்கும் படி மாணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் பாடங்கள் புரியாததாலும், ஒருபுறம் பெற்றோர்கள் கண்டிப்பதாலும், மறுபுறம் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் கூற முடியாத நிலையிலும் மனஉளைச்சலின் உச்சத்திற்குக்கே சென்ற மாணவர் அபிஷேக், வீட்டில் தோட்டத்து பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சு மருந்தினை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அபிஷேக் மயங்கி விழுவதை கண்ட பெற்றோர் அலறியடித்துக் கொண்டு அருகிலுள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தேனியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பில் நெருக்கடி ஒருபுறம் ஆசிரியர்களால் தரப்படுவதாலும், பெற்றோர்கள் படி படி என மாணவர்களை தொடர்ந்து கண்டிப்பதாலும் செய்தறியாது மாணவர்கள் மனமுடைந்து இதுபோன்று தற்கொலைக்கு முயல்வது அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆண்டிபட்டியில் மாணவர் அபிஷேக் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews