எப்.எம்.ஜி.இ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம்: மத்திய அமைச்சருக்கு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 19، 2020

Comments:0

எப்.எம்.ஜி.இ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம்: மத்திய அமைச்சருக்கு கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் காணொலிக் காட்சி மூலமாகக் நேற்று கலந்துரையாடினார். அப்போது, அம்மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கு நடத்தப்படும் எப்.எம்.ஜி.இ தேர்வு, இந்த ஆண்டு வரும் 31ம் தேதி நடைபெறுவதாகவும், தேர்வு மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால், தாங்கள் தேர்வு எழுதச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்தத் தேர்வை தங்களது வசதிக்கேற்ப நடத்த உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மேலும் மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, நேற்று மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு தாமே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெற உள்ள வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான எப்.எம்.ஜி.இ தேர்வு எழுதுவதற்கான மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதால், கொரோனா ஊரடங்குச் சூழலில் மாணவர்கள் செல்வதில் பல சிரமங்கள் உள்ளது. எனவே, இத்தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்குமாறு அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து, இந்தக் கடிதத்தை, டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை டெல்லியில் நேரில் சந்தித்து வழங்கினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة