பள்ளிக் கல்வி துறையிடம் 32 லட்சம் முகக் கவசங்கள் ஒப்படைப்பு: சமூகநலத் துறை வழங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 02، 2020

Comments:0

பள்ளிக் கல்வி துறையிடம் 32 லட்சம் முகக் கவசங்கள் ஒப்படைப்பு: சமூகநலத் துறை வழங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூகநலத் துறை சார்பில் 32லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சார்பில், சில மாதங்களுக்கு முன்பு 17 லட்சம் முகக் கவசங்கள் தயாரித்து தருமாறு சமூகநலத் துறையிடம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 17 லட்சம் முகக் கவசங்கள்தயாரித்து தரப்பட்டன. இதேபோல், 2 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 47 லட்சம் முகக் கவசங்கள்தயாரித்து தருமாறு கோரப்பட்டது. மகளிர் தையல் தொழில்கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 32லட்சம் முகக் கவசங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மகளிர் தையல் தொழில்கூட்டுறவு சங்கங்கள் மூலம் 32லட்சம் முகக் கவசங்களை தயாரித்து பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இதுவரை சுகாதாரத் துறைக்கு அளித்த 17 லட்சத்தையும் சேர்த்து 49 லட்சம் முகக் கவசங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة