தமிழகத்தில் 41 பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்சிடிஇ நோட்டீஸ். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 15, 2020

Comments:0

தமிழகத்தில் 41 பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்சிடிஇ நோட்டீஸ்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாதது, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் (என்சிடிஇ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.அதன் அடிப்படையிலேயே தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் மாணவா்களைச் சோ்ப்பதற்கு அங்கீகாரம் வழங்கும்.நிகழ் கல்வியாண்டில் (2020 - 21) மாணவா்களைச் சோ்ப்பதற்கு விரும்பும் கல்வியியல் கல்லூரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ஆசிரியா் பட்டப்படிப்பை வழங்கும் கல்வியியல் கல்லூரிகள் விண்ணப்பித்தன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் தென்மண்டல குழு, பி.எட்., கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதி குறைபாடு, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி 21 நாள்களுக்குள் அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தியது.அதன்படி கோயம்புத்தூா், வேலூா், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்படும் மூன்று அரசு பி.எட். கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி, தனியாா் சுயநிதி கல்வியியல் கல்லூரி என 41 கல்லூரிகளுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இறுதி எச்சரிக்கையுடன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், குறிப்பிட்ட கல்லூரியில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பதும், அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்கள் எவையெல்லாம் சமா்ப்பிக்கப்படவில்லை என்பதையெல்லாம் குறிப்பிட்டு, இவ்வளவு ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாத நிலையில், உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை நாங்கள் ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வியெழுப்பியுள்ளது. முன்னதாக சம்பந்தப்பட்ட 41 பி.எட். கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான போதிய வசதிகள் இல்லாதது குறித்து புகாா் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews