சத்துணவு முட்டைகள் வீடு வீடாக விற்பனை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 15، 2020

Comments:0

சத்துணவு முட்டைகள் வீடு வீடாக விற்பனை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படும் முட்டைகள், ஊட்டியில் வீடு வீடாக விற்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஒன்றியங்களில், பால்வாடி, ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளி என, 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி குழந்தைகளுக்கு, மதிய உணவு திட்டத்திற்காக, முட்டை, சத்துமாவு, பருப்பு வழங்கப்பட்டு வருகின்றன.ஜூலை மாதத்தில் இருந்து, பள்ளி குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று, அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட மதிய உணவுகளுக்கான பொருட்களை வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. ஊட்டி நகரில் சிலர், குறிப்பிட்ட வீடுகளுக்கு சென்று, வெளி மாவட்ட பண்ணையில் இருந்து வரவழைக்கப்பட்ட முட்டைகள் எனக் கூறி, தலா, மூன்று முதல் நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். அந்த முட்டையில், கருப்பு நிறத்தில் மார்க் போடப்பட்டிருந்ததை பார்த்து, மக்கள் கேள்வி எழுப்பினர். முட்டை விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் ஓட்டம் பிடித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர், சந்திரசேகரன் கூறுகையில், ''புகார் ஏதும் வரவில்லை. அரிசி, பருப்பு தான் வழங்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட யூனியன் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும்,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة