இரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 12، 2020

Comments:0

இரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி எழுதியுள்ள கடிதம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் சுதந்திரம் உண்டு. மும்மொழி கொள்கையை எதிர்க்கும் தலைவர்களின் குழந்தைகள், பேரன்கள் ஹிந்தி கற்கின்றனர். சிலர் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகின்றனர். இங்கு ஹிந்தி கட்டாய பாடம். கூடுதலாக ஒரு மொழியை கற்பதால் நாம் என்ன இழக்க போகிறோம்.
கடந்த 50 ஆண்டுகளாக மற்ற இந்திய மொழிகளை கற்கும் வாய்ப்பை தடுக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இரு மொழி கொள்கையால் நானே பாதிக்கப்பட்டேன். உயர் படிப்பு அல்லது வேலைக்காக தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றபோது மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்டேன். ஆங்கிலம் பாலமாக திகழ்கிறது என்கின்றனர். ஆனால், மார்க்கெட், பயணங்களின் போது உள்ளூர் மொழியில் பேச வேண்டியது அவசியமாகிறது. ஹிந்தி கற்பது மத்திய அரசு வேலை, ராணுவ பணி, வர்த்தகத்திற்கு உதவும். தேசப்பற்று, தேச ஒற்றுமையை வளர்க்கும். இரு மொழி கொள்கையை ஆதரித்த தலைவர்கள் இப்போது இருந்திருந்தால், தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டிருப்பர். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாலகுருசாமி கூறுகையில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக சமூகத்தின் சிலரால் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இதனை அரசியல் காரணங்களுக்காக அல்லது தரமான கல்வி பற்றிய அறிவு இல்லாதவர்கள் பரப்புகின்றனர். இதற்கு மாணவர்கள், பெற்றோர் இரையாகி விடக்கூடாது. புதிய கல்வி கொள்கை இந்தியாவின் கல்வி முறையை ஒருங்கிணைக்கிறது. மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, தேச உணர்வை விதைக்கிறது. பள்ளி, கல்லுாரி அளவில் மாற்றம், கல்லுாரிகளுக்கு தன்னாட்சி, தாராளமய கல்வி, திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கல்வி கொள்கையை வகுக்க சுதந்திரம் தரப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்கால கல்விக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது,''என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة