கொரோனா காரணமாக முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு(எம்.இ, எம்டெக்) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 10, 2020

Comments:0

கொரோனா காரணமாக முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு(எம்.இ, எம்டெக்) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா காரணமாக முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டது. கொரோனா பரவல் காரணமாக நேரடி கலந்தாய்வுக்கு பதிலாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எம்.இ, எம்டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்-லைன் முறையில் அண்ணாப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதுகலை பொறியியல் படிப்புக்கான எம்இ, எம்டெக், எம் ஆர்க், எம் பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒற்றை சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வை நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டு முதுகலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை கொரோனோ காரணமாக ஆன்லைனில் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் எம்.பி.ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வை கோவையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி நடத்த இருக்கின்றது. கடந்த ஆண்டுகளில் இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தி வந்தது. இந்நிலையில் கொரோனோ காரணமாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews