ஊட்டச்சத்து, உயர் கல்விக்கு தடையான ஊரடங்கு; மலைகிராமங்களில் பரிதவிக்கும் மாணவர்கள்: ஆய்வுகளில் பரபரப்பு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 09، 2020

Comments:0

ஊட்டச்சத்து, உயர் கல்விக்கு தடையான ஊரடங்கு; மலைகிராமங்களில் பரிதவிக்கும் மாணவர்கள்: ஆய்வுகளில் பரபரப்பு தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா ஊரடங்கால் தமிழக மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதிலும், உயர்கல்விக்கு செல்வதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா என்ற ஒற்றை வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்து, அனைத்து தரப்பு மக்களையும் அவதியில் ஆழ்த்தி உள்ளது. எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லாமல், அமைதியாக இருக்கும் மலைகிராமங்களில் கூட, கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சொற்ப அளவிலேயே மக்கள் பாதித்தாலும், அவர்களின் சராசரி வாழ்க்கையை கொரோனா வைரஸ் அடியோடு புரட்டிப்போட்டுள்ளது. வழக்கமான நாட்களிலேயே அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பார்வை படாத இடமாகவே மலைகிராமங்கள் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா பீதியால் மலைகிராமங்கள், துண்டிக்கப்பட்ட தனித்தீவு போலவே காட்சியளிக்கிறது. இதில் வேலையிழந்து வருமானம் இல்லாமல் குடும்பங்கள் தவித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பது முதல், மாணவர்கள் உயர் கல்விக்கு செல்வது வரை அனைத்துமே கேள்விக்குறியாக மாறியுள்ளது என்கின்றனர், மலைகிராமங்களில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சமூக மேம்பாட்டு அமைப்பினர். இது குறித்து மலைவாழ் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான மக்கள் இணையம் அமைப்பின் நிர்வாகி ராமு கூறியதாவது: சேலத்தில் சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, பாலமலை, நாமக்கல்லில் போதமலை, கொல்லிமலை, தர்மபுரியில் சித்தேரிமலை, வத்தல்மலை, கிருஷ்ணகிரியில் அஞ்செட்டிமலை, திருவண்ணாமலையில் ஜவ்வாதுமலை, திருச்சியில் பச்சைமலை, கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை, ஈரோட்டில் பருகூர் மலை என்று ஏராளமான மலைகிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 5லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியம் மாறாமல் அங்கு வாழ்ந்தாலும், பிழைப்பு தேடி அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் 95சதவீதம் பேர், தற்போது சொந்த கிராமங்களுக்கு வந்துவிட்டனர். ஆனால் உள்ளூரில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு சரியாக உணவு அளிக்கக்கூட அவர்களால் முடியவில்லை. தற்போது சமவெளிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று, உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஆனால் மலைகிராம பள்ளி குழந்தைகளுக்கு இந்த உணவுகள் 90சதவீதம் சென்று சேரவில்லை. உண்டு உறைவிட பள்ளிகளும் 4மாதங்களுக்கு மேலாக பூட்டிக்கிடக்கிறது. இதனால் மலைகிராம குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதேபோல் தற்போது சமவெளி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் உள்பட அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளை நோக்கி நகரத்துவங்கியுள்ளது. ஆனால் மலைகிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. அப்படி ஒரு வகுப்பு நடப்பதே தெரியாத சூழலில் தான், பல மாணவர்கள் உள்ளனர். இதேபோல் பிளஸ்2 படித்து விட்டு சொந்த கிராமங்களில் தங்கியிருக்கும் மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதற்குரிய போட்டித் தேர்வுகளுக்கு படிக்க வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்கள் மலைகிராமங்களில் இருந்து நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு வந்து செல்வதற்கு ஏராளமான சிரமங்கள் உள்ளது. எனவே மலைகிராம மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் கிடைக்கவும், உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையிலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உண்டு உறைவிட பள்ளிகள் திறப்பதால் பலன்கிடைக்கும் ‘‘மலைகிராம மாணவர்களின் உணவுக்கும், உயர்கல்விக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் உண்டு உறைவிட பள்ளிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. இந்த பள்ளிகளை திறந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மாணவர்களை கிராமங்களில் இருந்து வந்து தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு தரமான உணவுகளை பரிமாறி, உயர்கல்வியில் சேர்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும். இப்படி செய்வதால் இரண்டு பிரச்னைகளும் ஓரளவு தீர வாய்ப்புள்ளது,’’ என்கின்றனர் மலைவாழ் மக்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة