காலத்துக்கேற்ற 'ஆன்லைன்' கல்வி முறை - மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 09، 2020

Comments:0

காலத்துக்கேற்ற 'ஆன்லைன்' கல்வி முறை - மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஆன்லைன் வாயிலான கல்வி என்பது, நம்முடைய கல்வி முறையில், வீரியமிக்க, காலத்துக்கேற்ப மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என, ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், ஜே.சி.சவுத்ரி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால், பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாடு முழுதும், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த புதிய முறை குறித்து, ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், சவுத்ரி கூறிஉள்ளதாவது:கொரோனா பரவல் காலத்தில், பள்ளி, கல்லுாரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சில கல்வி நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கையுடன், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன.இந்த மாற்றம், கற்பித்தல் மற்றும் கற்பதில், தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, சிறந்த முறையில் கற்பிக்கும் வகையில், நம்மை மேம்படுத்திக் கொள்ள கிடைத்துள்ள அரிய வாய்ப்பாக நினைக்க வேண்டும்.ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து எங்களுடைய மாணவர்கள், ஆன்லைன் மூலமாகவே கற்று வருகின்றனர். நாடு முழுதும், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர உள்ள, 1.25 லட்சம் மாணவர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன், இந்த முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த முறை, வழக்கமாக வகுப்புகளில் படிப்பதைவிட, மிகச் சிறந்த முறையில் அமைந்துள்ளது. மாணவர்களின் பயண நேரம், செலவு, அவர்களுடைய சக்தி வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.வகுப்பறையில் இருக்கும் சில இடையூறுகள் இல்லாததால், படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.பெற்றோரும், தங்களுடைய குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வி குறித்தும், பாடத்தில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் குறித்தும் நேரடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்து உடனடி தேர்வு மூலம் மதிப்பீடப்படுகிறது. இதன் மூலம், எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் தெரிய வருகிறது. நாட்டில், 75 சதவீத மக்களுக்கு இன்டர்நெட் வசதி இல்லாத நிலையில், 'விசாட்' எனப்படும், செயற்கைக்கோள் உதவியுடன் கற்பிக்க வாய்ப்பு உள்ளது.ஆகாஷ் மையங்களில், இதுபோன்ற வசதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி என்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة