கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கை சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 06, 2020

Comments:0

கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கை சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கலை, அறிவியல் கல்லுாரி படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்றுவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர, ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கியது; 31ல் விண்ணப்ப பதிவுகள் முடிந்தன. இதுவரை, 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 92 ஆயிரம் இடங்களில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்த மாணவர்கள் அசல் சான்றிதழ்களை, 'ஸ்கேன்' செய்து, ஆன்லைனில் பதிவேற்றும் வசதி, ஆகஸ்ட், 1ல் துவங்கியது. வரும், 10ம் தேதி வரை பதிவேற்ற, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில், அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.பல மாணவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்றுவதற்கான வசதி காண்பிக்கப்படவில்லை.
குறிப்பாக, விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளில், விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்ற முடியவில்லை. இந்த தொழில்நுட்ப சிக்கலுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் தீர்வு காண வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். விண்ணப்ப பதிவு மற்றும் தொழில்நுட்ப சிக்கல் குறித்த சந்தேகங்களுக்கு, 044 - 2235 1014, 2235 1015, 2235 0523 மற்றும், 2235 0527 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், care@tndceonline.org என்ற, 'இ - மெயில்' முகவரியில் புகார்களை அனுப்பலாம் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews