நியாயவிலை கடைகளில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக செயல்பட தெரிவித்தல் சார்பு - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 03, 2020

Comments:0

நியாயவிலை கடைகளில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக செயல்பட தெரிவித்தல் சார்பு - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ப.வெ.எண்:01/01/2020 நாள்: 03.08.2020 பொருள்: பள்ளிக்கல்வித்துறை - கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடைவடிக்கைகள் - பொது வினியோக முறை -- நியாயவிலை கடைகளில் கொரோனா நடைமுறைகள் பொது மக்களிடையே செயல்படுத்துதல் - -ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக செயல்பட தெரிவித்தல் -- சார்பு
பார்வை : மதிப்புமிகு திருப்பத்துார் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி அறிவுரை நாள்: 15.07.2020.
************ காணும் மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் திருப்பத்தார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையின்படியும், இணைப்பில் கண்ட பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி தாலுக்கா எல்லைக்குட்பட்ட மாதனூர் ஒன்றியம், மாதனூர் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட பேர்ணாம்பட் ஒன்றியம் மற்றும் நாட்றம்பள்ளி ஒன்றியங்களில் அமைந்துள்ள பொது விநியோக நியாயவிலை கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் முக்கவசம் அணிதல் போன்ற நடைமுறைகளை அப்பகுதி பொது மக்களிடையே நடைமுறைபடுத்திட தன்னார்வலர்களாக செயல்பட இணைப்பில் கண்ட ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து தினந்தோறும் நடைமுறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமாய் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தினந்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டியுள்ளதால் பொது விநியோக நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரத்தை பிற்பகல் 1.00க்குள் வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு deovnb2018@gmail.com தவறாமல் அனுப்பி வைத்திடவேண்டுமாய் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கலாகிறது. மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) வாணியம்பாடி-635752.
பெறுநர் வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாதனூர், நாட்றம்பள்ளி மற்றும் பேர்ணாம்பட்.
நகல்:
1. மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் அவர்களுக்கு தகவலுக்காக
பணிந்து சமர்பிக்கப்படுகிறது.
2. முதன்மைக்கல்வி அலுவலர், திருப்பத்தூர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews