'சைல்டு லைனு'க்கு போன் செய்து திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 04, 2020

Comments:0

'சைல்டு லைனு'க்கு போன் செய்து திருமணத்தை நிறுத்திய பள்ளி மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சைல்டு லைன்' அமைப்புக்கு போன் செய்து, பள்ளி மாணவி, தன் திருமணத்தை நிறுத்தினார்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மாம்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்தவர், 16 வயது பள்ளி மாணவி. அதே ஊரில் அரசு பள்ளியில், பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்ல உள்ளார். இந்நிலையில், மாணவிக்கும், அருகில் உள்ள திண்டிவனம் கிராமம், கொல்லக்கொட்டாயைச் சேர்ந்த ராஜிவ் காந்தி, 23, என்ற பால் வியாபாரிக்கும் நேற்று முன்தினம், திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.இதில் விருப்பமில்லாத மாணவிக்கு, பள்ளியில் அடிக்கடி சொல்லப்படும், 1098 என்ற, 'சைல்டு ஹெல்ப் லைன்' நம்பர், நினைவுக்கு வந்தது. 1ம் தேதி இரவு, அந்த எண்ணுக்கு போன் செய்து, மறுநாள் தனக்கு நடக்க உள்ள திருமணத்தை நிறுத்தும்படியும், தான் படிக்க விரும்புவதாகவும் கூறினார்.இதையடுத்து, போளூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை மீட்டனர். போலீசார் வருவதை அறிந்த மணமகன், அவரது பெற்றோர் தலைமறைவாகினர்.சமூகநலத் துறை அதிகாரிகள், மாணவியின் பெற்றோருக்கு அறிவுரை கூறி, மாணவியை மீட்டு, திருவண்ணாமலை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் கைது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன் மாயமானார். தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், தானிப்பாடி அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, பால் வேன் டிரைவர் முனீஸ்வரன், 23, சிறுமியை கடத்தி, திருமணம் செய்தது தெரிந்தது. முனீஸ்வரனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews