'ஆன்லைன்' பி.எஸ்சி., படிப்பு சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 01، 2020

Comments:0

'ஆன்லைன்' பி.எஸ்சி., படிப்பு சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், 'ஆன்லைன்' வழி பி.எஸ்சி., பட்டப்படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த், நேற்று இப்படிப்பை துவக்கி வைத்தார். இதில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர், சஞ்சய் தாத்ரே, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர், அனில் சகஸ்ரபுதே, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர், பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.இந்த படிப்பு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர், பிரதாப் ஹரிதாஸ் அளித்த பேட்டி:புதிதாக துவங்கப்பட்டுள்ள, பி.எஸ்சி., பட்டப்படிப்பு, 'கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ்' பாடப்பிரிவில் நடத்தப்படும். இந்த பட்டப்படிப்பை முடிக்க, மொத்தம், 2.2 லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்களின் செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களை பொறுத்து, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 'ஆன்லைனில்' பாடங்கள் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில், அவற்றை படித்து கொள்ளலாம். செயல்முறை குறிப்புகளும் அனுப்பப்படும். முக்கியமான செயல்முறை வகுப்புக்கு, நேரடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, குறிப்பிட்ட மையத்தில், அதற்கான வகுப்பு நடத்தப்படும். இந்த படிப்புக்கான தேர்வுகளை, மாணவர்கள் நேரடியாக பங்கேற்று எழுத வேண்டும். எந்தவித குளறுபடிக்கும் இடம் இல்லாமல், கற்பித்தலிலும், தேர்வு நடத்துவது மற்றும் மதிப்பீட்டிலும், எந்த சமரசமும் செய்யப்படாது.இந்த படிப்பில் சேர, 10ம் வகுப்பு அளவில் கணிதம், ஆங்கில அறிவு இருந்தால் போதும். ஆனால், பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும். கணிதம், அறிவியல், பொருளியல் என, எந்த பாடப்பிரிவில் படித்தாலும், இந்த படிப்பில் சேரலாம். முதல் இரண்டு ஆண்டுகள், அடிப்படை சான்றிதழ் படிப்பு நடத்தப்படும். மூன்று மற்றும் நான்காம் ஆண்டில் தொடர்ந்தால், டிப்ளமா சான்றிதழ் பெறலாம். ஆறு ஆண்டுகள் படித்தால், முழுமையாக பட்ட சான்றிதழ் பெறலாம்.வேறு படிப்பு படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என, யார் வேண்டுமானாலும், இந்த படிப்பில் சேரலாம். இந்த படிப்பை முடிப்பவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் கிடைக்க, உரிய துறைகளுக்கு கடிதம் அனுப்பப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة