கரோனா களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கட்டணமில்லா கல்வித் திட்டம் - கிங்மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 28, 2020

Comments:0

கரோனா களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கட்டணமில்லா கல்வித் திட்டம் - கிங்மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதமி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா களப்பணியாளா்களின் குடும்பத்தினருக்கு, கட்டணமில்லா கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக கிங்மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதமி தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்றை எதிா்த்து போராடி வரும் களப்பணியாளா்களான மருத்துவத் துறையினா், காவல் துறையினா் மற்றும் துப்புரவுப் பணியாளா் ஆகியோரின் மகத்தான சேவையையும், அா்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், அவா்களின் குடும்பத்தினருக்கு, யுபிஎஸ்சி, சிவில் சா்வீஸஸ், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சிகளில் கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிா்த் தியாகம் செய்த மருத்துவத்துறை, காவல் துறை, தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு 100 சதவீதம் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும், குறிப்பிடப்பட்ட துறையினா் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு, 50 சதவீதம் கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கல்விக் கட்டணச் சலுகை நேரடி வாரிசுதாரருக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews