ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்: பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 02، 2020

Comments:0

ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்: பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்திய வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும் AICTE உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும், கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கல்வி நிறுவனங்கள் திறப்பு தள்ளி கொண்டே போகிறது. அத்துடன், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இதனிடையே, ஜூலைக்கு பதிலாக கல்வியாண்டை செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என கொரோனா முடக்கத்தை கருத்தில் கொண்டு கற்றல் - கற்பித்தல் நடைமுறை, தேர்வுகள், சேர்க்கை, கல்வியாண்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சிறப்பு குழு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட்டில் முடிக்கவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், B.E., B.Tech., படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், 2, 3, 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16 முதல் தொடங்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர்கல்வித் துறையின் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்றது. அதில், ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்குள் முதல் சுற்று கலந்தாய்வையும், செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் முடிக்க வேண்டும்.நிரம்பாத இடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.செப்டம்பர் 16ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة