தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் நாளை (புதன்கிழமை) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் முதல் நாளன்றே பாடப்புத்தகங்களை வழங்குவதற்கானஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. அதன்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கெனவே அனைத்து பள்ளிகளையும் சென்றடைந்து விட்டன.
இதற்கிடையே, முதல்கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அரசுமுடிவு செய்துள்ளது. இதையொட்டி, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுமுறைகளை பள்ளிக்கல்வித் துறை கடந்த வாரம் வெளியிட்டது.
பாடப் புத்தகங்கள் வாங்கவரும் மாணவர்களும், பெற் றோரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
முதல்வர் தொடங்கிவைக்கிறார்
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்றுதொடங்கிவைக்கிறார். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்கட்டமாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் நாளை முதல்அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. கூடுதலாக பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்களின் மடிக்கணினியில் வீடியோ பாடங்களும் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட உள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.