SSLC தேர்வு ரத்து மாணவர்கள்-பெற்றோர், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 10، 2020

Comments:0

SSLC தேர்வு ரத்து மாணவர்கள்-பெற்றோர், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பீதியில் இருந்தால் யோசித்து தேர்வினை சரியாக எழுத முடியாது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் என்பது கொஞ்சம் வருத்தம் அளிப்பதாக உள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து பொதுத்தேர்வு மதிப்பெண்களை எடை போட முடியாது. ஏனெனில் பொதுத்தேர்வுக்கு அதை விடவும் சிறப்பாக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். எஸ்.எஸ்.எல்.சி.மாணவி அஸ்வினி:- தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் தரப்பில் இருந்து மாலை அணிவித்து, நாங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற மிகப்பெரிய குழப்பம் நீடித்தது. மேலும் இந்த பேரிடர் காலத்தில் பயத்துடனேயே தேர்வு எழுத செல்லவேண்டிய நிலையும் இருந்தது. அதற்கு தமிழக அரசு முடிவுரை எழுதியிருக்கிறது. மகிழ்ச்சியும், வருத்தமும் ஆசிரியை சர்மிளா:- கொரோனா பரவி வருவதால் பயம் காரணமாக மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் தேர்வினை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சில மாணவர்களுக்கு மகிழ்ச்சியும், சில மாணவர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக தேர்வுக்கு கடைசி நேரத்திலேயே ஏராளமான மாணவர்கள் தங்களை தயார்படுத்துவார்கள். காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களின் நிலை என்னவாகும்? என்று தெரியவில்லை. ஆசிரியர் ராஜ்குமார்:- கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் மாணவர்கள் பயத்துடன் தேர்வு எழுதுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அரசு சரியான நேரத்தில், சரியான முடிவினை எடுத்திருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில் தேர்வு ரத்து செய்வது மட்டுமே, நோயை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் இருக்கும். ஒருவேளை தேர்வு நடத்தினால், அது கொரோனா பரவுவதற்கு வாய்ப்பினை கொடுப்பதாகவே இருக்கும். இதனால் தமிழக அரசுக்கு நன்றி. உடன்பாடு இல்லை எஸ்.எஸ்.எல்.சி. மாணவரின் தந்தை வெள்ளைச்சாமி:- உழைத்து முன்னேறுவதற்கும், திருடி பெரிய ஆள் ஆவதற்கும் வித்தியாசம் உண்டு. அதுபோலத்தான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து என்ற முடிவை பார்க்கவேண்டிய நிலை இருக்கிறது. என்னுடைய மகன் நன்றாக படிக்கக்கூடியவன். தேர்வுக்கு தன்னை நல்ல முறையில் தயார்படுத்தியிருந்தான். அவர் தேர்வு எழுதியிருந்தால் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பான். அவனுக்கு பிடித்த குரூப்பும் பிளஸ்-1ல் கிடைக்கும். இப்போது எத்தனை மதிப்பெண்கள் வருகிறதோ, அதில் அவனுக்கு எந்த குரூப் கிடைக்கிறதோ என்பதில் குழப்பம் உள்ளது. எனவே தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. மாணவரின் தாயார் இசைமணி:- கொரோனா பரவும் இந்த சமயத்தில் தேர்வுக்கு அனுப்புவது பயமாக இருந்தது. அதனால் தேர்வு ரத்து என்பது வரவேற்புக்கு உரியது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் சரியாக படிக்காத மாணவர்கள், ஆசிரியர்கள் கண்டிப்பு செய்த உடன் பொதுத்தேர்வுக்கு நன்றாக படித்து தேர்வினை எழுதுவார்கள். இவ்வாறு இருக்கும்போது காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்பது சரியான முடிவு இல்லை என்று கருதுகிறேன். என்னுடைய மகன் நன்றாக படித்தான். தேர்வு நடந்திருந்தால் அவன் 480-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுப்பான். மகிழ்ச்சியோடு தொடருவார்கள் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:- தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மக்களாட்சி மாண்புக்கு உட்பட்டது. கட்டாயப்படுத்தி தேர்வு எழுத சொல்லி மாணவர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்காதீர்கள் என்று அனைவரும் சொன்னார்கள். தேர்வை ரத்து செய்யவேண்டும், எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று குரலும் எழுப்பப்பட்டது. குரல் கொடுத்த எதிர்கட்iசி உள்பட அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மக்கள் சார்பாக நீதிமன்றம் அரசுக்கு வைத்த வேண்டுகோளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களையோ, கல்வி தரத்தையோ அது பாதிக்காது. மகிழ்ச்சியோடு அடுத்த கல்வியாண்டுக்குள் மாணவர்கள் தொடருவார்கள். இதை செய்த அரசுக்கு மக்கள் சார்பில் நன்றி. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة