தனியே... தன்னந்தனியே... 1,610 பேர்! தேர்வு எழுத முடியாமல் தனித்தேர்வர்கள் தவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 26, 2020

Comments:0

தனியே... தன்னந்தனியே... 1,610 பேர்! தேர்வு எழுத முடியாமல் தனித்தேர்வர்கள் தவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த, ஆயிரத்து 610 தனித்தேர்வர்களுக்கும் விலக்கு அளிக்க, அரசு முன்வர வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகம் முழுக்க, கடந்த மார்ச் 27ம் தேதி துவங்க இருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, ரத்து செய்யப்பட்டது.இத்தேர்வில் பங்கேற்க, 41 ஆயிரத்து 118 பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வருகைப்பதிவு அடிப்படையில், பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணிகள்விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆனால், பழைய பாடத்திட்டத்தில் இருந்து, பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த 807 பேர், புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள, 703 பேர் என, ஆயிரத்து 610 பேருக்கு, மதிப்பெண்கள் கணக்கிடுவது, தேர்ச்சி நிலை குறித்த எந்த, அறிவிப்பையும் தேர்வுத்துறை வெளியிடவில்லை.சமீபத்தில், தனித்தேர்வர்கள் சிலர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, மனு அளித்த நிலையில், மேலும் சிலர் பொதுத்தேர்வில் விலக்கு அளிக்க கோரி, கல்வித்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர். தனித்தேர்வர்களுக்கான தேர்வு மைய பயிற்றுனர்கள் சிலர் கூறுகையில், 'தமிழகம் முழுக்க, கிட்டத்தட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, தனித்தேர்வர்களின் உயர்கல்வி திட்டங்கள் முடங்கியுள்ளன. அரசு தக்க தீர்வு காண வேண்டும்' என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews