'ஆன்லைன்' வகுப்பு நடைமுறை என்ன? மனிதவள அமைச்சகம் ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 17, 2020

Comments:0

'ஆன்லைன்' வகுப்பு நடைமுறை என்ன? மனிதவள அமைச்சகம் ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஆன்லைன்' வகுப்பு நடைமுறை என்ன? மனிதவள அமைச்சகம் ஆலோசனை
மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' வகுப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை வரையறுக்கும் பணியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, நாடு முழுதும், மார்ச், 16லிருந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக, மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன. பெற்றோர் புகார் இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளில், 'மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப்' ஆகியவற்றின் மூலமாகவே மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிகமான நேரத்தை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் செலவிட வேண்டியுள்ளதாகவும், அதனால், அவர்களது உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் ஆன்லைன் மூலமாக படிக்க வைப்பது சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.சில வீடுகளில் ஒரே ஒரு ஸ்மார்ட் போன் இருந்து, அந்த வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு எப்படி ஆன்லைன் வழியாக பாடம் கற்பிக்க முடியும் என்றும் புகார் தெரிவித்துள்ளனர். இதுதவிர, ஆன்லைன் வழியாக பாடம் கற்கும்போது, தேவையில்லாத அல்லது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இணையதளங்களை குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் ஏற்படும் விளைவு குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், ஆன்லைன் வகுப்பின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வரையறுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேர வரையறை இது குறித்து, மத்திய மனிதவளத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:ஆன்லைன் வகுப்பின்போது, மாணவர்கள், மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரையே நீண்ட நேரம் தொடர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்கான நேர வரையறை உருவாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, கல்வியாளர்கள், டாக்டர்கள், மன நல ஆலோசகர்கள், பெற்றோருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். பெற்றோரின் வருவாய், அவர்களது வீடுகளில் உள்ள வசதி, இணைய வசதி போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனவே, இவை அனைத்தையும் ஆய்வு செய்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன கணினி முன்பும், ஸ்மார்ட்போன் முன்பும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகள் அமர்ந்திருப்பது குறித்த பெற்றோர்களின் கவலையை அறிந்த மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட உள்ளது. கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளன. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் முடியாமல் இருந்து வருகிறது. சிபிஎஸ்இ பிரிவிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுகளும் நடக்காமல் இருந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையே அடுத்த கல்வியாண்டும் தொடங்கிவிட்டது. ஆனால் இதுவரை கல்வியாண்டு தொடங்கிவிட்டதாக மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன ஆனால், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டதிலிருந்துதான் பெற்றோருக்குப் பெரும் கவலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பள்ளிக்கு நேரடியாகச் செல்லும்போது குறிப்பிட்ட நேரம்தான் குழந்தைகள் வகுப்பில் இருப்பார்கள். ஆனால், ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து குழந்தைகள் எந்நேரமும் செல்போன் முன் அமர்ந்திருப்பதும், கணினி முன் அமர்ந்திருப்பதும் பெற்றோருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்குச் சிறிதுகூட ஓய்வில்லாமல் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருவதாக பெற்றோர் தரப்பில் மனித வளத்துறை அமைச்சகத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான புகார்கள் சென்றன. ஆன்லைன் வகுப்புகளை வரைமுறைப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட நேரம் வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் பொருட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கும் பணியில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துவதால் குழந்தைகள் செல்போன் முன்பும், கணினி முன்பும் அமரும் நேரம் குறித்து ஏராளமான புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. ஒருபுறம் பள்ளிகள் தங்கள் எல்லைக்குள் மாணவ, மாணவிகள் செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவு போட்டு, செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வலியுறத்துகிறார்கள். ஆனால், இப்போது ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் மணிக்கணக்கில் குழந்தைகளை அதே செல்போன் முன் அமரவைக்கிறார்கள். இந்த இரு அம்சங்களுக்கும் இடையே நடுநிலைத்தன்மை வேண்டும். பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கையால் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வருகிறோம். நீண்டநேரம் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் பங்கேற்காமல் குறிப்பிட்ட நேரம் மட்டும் பங்கேற்றால் போதுமானது என்ற வகையில் நேரக் கட்டுப்பாடு கொண்டுவரப்போகிறோம். ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு ஒரு வசதியை அளிக்கிறது. கடினமான சூழலில் வகுப்புகளில் அமர்ந்து படிப்பதை விட, மாணவர்களை அவர்களின் போக்கில் படிக்க ஆன்லைன் வகுப்புகள் துணைபுரிகின்றன. ஆனால், அதற்கு வரையறைகள் அவசியம். சில வீடுகளில் ஒரு செல்போன் மட்டும் இருக்கும். அதை வைத்துக் குழந்தையும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று ஏதாவது அழைப்பு வந்தால் பேசிக்கொள்ளும் சூழலும் பெற்றோருக்கு சிரமத்தைத் தருகிறது என்பதை அறிகிறோம். அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களின் மனநலன், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பற்ற சூழலில் பயன்படுத்துதல், ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றையும் அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால், விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியாகும்” எனத் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews