பள்ளி மாணவர்களுக்கான கட்டுரையின் போட்டி முடிவு அறிவிப்பில் சிக்கல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 16, 2020

Comments:0

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரையின் போட்டி முடிவு அறிவிப்பில் சிக்கல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்லுயிர் பாதுகாப்பு குறித்து, பள்ளி மாணவர்களுக்காக, வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக பல்லுயிர் பாதுகாப்பு நாள், மே, 22ல் கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக, மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது.இதனால், வனத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு வாரியம் சார்பில், ஆன்லைன் கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல், ஜூன், 8ல் வெளிடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பட்டியல் வராததால், போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஊரடங்கு உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களால், கட்டுரை போட்டி முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதில், 4,500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை, ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் முடிவுகளை, ஜூன், 22ல் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews