ஓய்வு வயதை நீட்டிக்கும் உத்தரவு செல்லாததாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 16, 2020

Comments:0

ஓய்வு வயதை நீட்டிக்கும் உத்தரவு செல்லாததாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு அண்மையில் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-இலிருந்து 59-ஆக உயர்த்தி உத்தரவிட்டது. கடமையை நேர்மையாகவும், நியாயமாகவும் பணிபுரிந்த அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை ஓராண்டு அதிகரித்திருப்பதில் குற்றம் இல்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் துறை ரீதியிலான விசாரணையை எதிர்கொண்டு வரும் அரசுப் பணியாளர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை, ஓராண்டு நீட்டித்திருப்பது சட்டவிரோதமானது. எனவே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்
ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை நிறுத்தி, அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே, அரசின் அனைத்து துறைகளிலும், இந்த ஆண்டு ஏராளமானோர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன் அளிக்க, அதிக நிதி தேவை. மேலும், தற்போதுள்ள சூழலில் புதிய ஆட்கள் தேர்வு எப்போது நடக்கும் என்றும் கூற முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த மே 8ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு, இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58-லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என பல எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளதாகவும், நேர்மையாக நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டுகள் நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதே வேளையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கும் எதிரானது என்றும் எனவே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வரை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் தமிழக அரசு இதுகுறித்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews