பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழு கற்றல், கற்பித்தல் குறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கை தாக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 11, 2020

Comments:0

பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழு கற்றல், கற்பித்தல் குறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கை தாக்கல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகள் திறப்பு ,கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள், பாடம் குறைப்பு _ இவைகளுக்காக அமைக்கப்பட்ட சிஜி தாமஸ் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு தனது முதல் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநர் குழு பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழு கற்றல், கற்பித்தல் குறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கை தாக்கல் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழு கற்றல், கற்பித்தல் குறைகளை ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. இறுதிகட்ட அறிக்கையை விரைவில் அளிக்க உள்ளது. 16 பேர் கொண்ட குழு கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த கல்வியாண்டில் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்பட்டுள்ள ஆசிரியர்மாணவர்களின் இடைவெளி, கற்றல், கற்பித்தல் குறைபாடுகள், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது?, பள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடத்திட்டங்களை குறைக்கலாமா? அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? என்பது உள்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து கல்வித்துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 16 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழு இதுவரை 2 முறை நேரடியாகவும், 2 முறை காணொலி காட்சி மூலமும் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறது. மேலும், பள்ளிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையிலும் ஆராய்ந்து வருகிறது.
முதற்கட்ட அறிக்கை தாக்கல் இந்த நிலையில், 16 பேர் கொண்ட இந்தக்குழு ஆராய்ந்து அதன் மூலம் எடுக்கப்பட்ட சில கருத்துகளை உள்ளடக்கிய முதற்கட்ட அறிக்கையை கல்வித்துறையிடம் தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையை பார்த்து, மேலும் கூடுதல் தகவலை குழுவினரிடம், கல்வித்துறை கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையிலும், மத்திய அரசு வெளியிட இருக்கும் அடுத்தகட்ட வழிகாட்டுதல்களை பொறுத்தும் இறுதிகட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு தாமதமாவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தற்போது தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும், பள்ளிகளை திறந்தால் பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்குமா, இல்லை பாடத்திட்டம் குறைக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews