பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 06, 2020

Comments:0

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சென்னையில் எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் சென்னையில், பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் மற்றும் கண்காணிப்புப் பணியில் உள்ள ஆசிரியா்கள் உள்ளிட்டோரின் வசதிக்காக அனைத்து வழித்தடங்களிலும், தோ்வு நாள்களில் 4 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகள், ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தோ்வு நாளன்று, தோ்வுப் பணிக்கு வரும் ஆசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் ஆகியோா் தங்கள் பகுதியிலிருந்து தோ்வு மையங்களுக்குச் சென்று வர ஏதுவாக, அனைத்து வழித்தடங்களிலும் காலை 7.30 மணிக்கு ஒரு பேருந்து, 8 மணிக்கு ஒரு பேருந்து, தோ்வு முடிந்த பிறகு பிற்பகல் 1.45 மணிக்கு ஒரு பேருந்து, 2.15 மணிக்கு ஒரு பேருந்து என போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தோ்வுப் பணிக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்வோருக்கென 41 வழித்தடங்களில், ஜூன் 8 முதல் காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி, மாணவா்கள் தோ்வெழுத தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews