அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து முன்னாள் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 11، 2020

Comments:0

அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து முன்னாள் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து முன்னாள் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம்
அண்ணா பல்கலை. கிண்டி பொறி யியல் கல்லூரியின் (வளாகக் கல்லூரி) முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் வட அமெரிக் ராவில் செயல்படும் பல்கலை. முன்னாள் மாணவர்கள் கூட்ட மைப்பு ஆகியவை இணைந்து தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "அண்ணா பல்கலைக் கழகத்தை உலகளாவிய அளவில் சிறப்பான இடத்தை பிடிக்க உதவும் வகையில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் ரூ.1,000 கோடி மட்டுமல்லாது சிறந்த கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றுக்கு முன்பை விட தனிக்கவனம் கொடுக்க முடியும். உலக அளவில் நமது மாணவர்களும், பல்கலைக்கழகமும் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கப்பெறும் இந்த சிறப்பு அந்தஸ்தை, தமிழக அரசின் தாமத நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகம் இழந்து விடக் கூடாது.
இதுபோன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா என்ற கேள்வியும் எழு கிறது. எனவே, சிறப்பு அந்தஸ் தைப் பெற மாநில அரசின் நிதி பங்கீட்டு தொடர்பான ஒப்புதல் கடிதத்தை தமிழக முதல்வர் தர வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும்" என கூறியுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة