بحث هذه المدونة الإلكترونية
السبت، مايو 16، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து விவசாயிகளுக்கும், பயிர் கடன்களை உடனடியாக வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை, விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர் கடன்கள் வழங்குகின்றன. ஓராண்டிற்குள் கடன் தொகை முழுவதையும் திரும்ப செலுத்தினால், வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில், 2019 -- 20ம் நிதியாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு, 13.02 லட்சம் விவசாயிகளுக்கு, 9,352 கோடி ரூபாய் அளவுக்கு, பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கால், பல விவசாயிகள், தங்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக, காய்கறிகள், பழங்கள் பயிரிட்ட விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல், பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பயிர் கடன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், ஏப்ரலில், 10 ஆயிரத்து, 481 விவசாயிகளுக்கு, 78 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால், பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பயிர் கடன் கோரினால், தாமதமின்றி, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கடன் தர தாமதம் செய்தால், சம்பந்தப்பட்ட வங்கி கிளைகள் தொடர்பாக, சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
BANKING
NEWS
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கடன் செலுத்த 3 மாதம் அவகாசம் - கூட்டுறவுச் சங்க பதிவாளர் கடிதம்
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கடன் செலுத்த 3 மாதம் அவகாசம் - கூட்டுறவுச் சங்க பதிவாளர் கடிதம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.