அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 11, 2020

Comments:0

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொழில்துறைகள் முடக்கம் காரணமாக மத்திய மநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், வருவாய் இழப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் - மத்திய அரசு கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் சென்னையில் ஒரே நாளில் ஆறு காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று! கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
முதல்கட்டமாக 50% பேருந்துக்களை அரசு அறிவிப்பு வந்ததும் இயக்க தயாராகும் பணிமனைகள்; பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து கழக பொறியாளர்கள், அதிகாரிகள் ஆய்வு! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் இருப்பதால் அவை சரி செய்யப்பட்ட பின்னரே விசாரணைக்கு வரும் என தகவல். இந்திய நிறுவனம் அசத்தல்.. 500 ரூபாய் செலவு.. 90 நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்! ரேபிட் டெஸ்ட் கிட் ரெடி . சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றி, ரயில்களை இயக்கிட வேண்டும்; உறுதி செய்யப்பட்ட இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி! நாளை முதல் 50% பயணிகளுடன் ரயில்கள் இயங்க உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்தது. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் நடப்பு ஆண்டில் குத்தகை தொகையை அதிகரிக்க கூடாது; 2020-21 நிதியாண்டில் தொழிற்சாலைகளுக்கு குத்தகை கட்டணம் உயர்த்தப்படாது!
முதல் காலாண்டிற்கான குத்தகை தொகையை செலுத்த கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு - மத்திய தொழில்துறை அமைச்சகம் உத்தரவு! கொரோனா இல்லாத மாவட்டமாகிறது திருப்பூர்' கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனாவிலிருந்து குணமடைந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்ப உள்ளனர் கொரோனா இருந்த எஞ்சிய இருவரும் குணமடைந்ததால் தொற்று இல்லாத மாவட்டமாகிறது திருப்பூர். தவறாக பாய்ந்த ஏவுகணை: 19 ஈரான் வீரர்கள் பலி #ஈரான் #கடற்படை #ஏவுகணை கரோனா ஊரடங்கு 3.0- அதற்கு பிறகு என்ன?- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews