ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 09, 2020

Comments:0

ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. 50 சதவீதம் மாணவர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க முடிவு..?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் பள்ளிகளில் 50% மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் 50% மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..
நாடு முழுவதும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 17ம் தேதியுடன் முடிவடைகிறது இதைத்தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை குறித்து ஆராய்ந்து புதிய வழிகாட்டுதல்களை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவுக்கு உத்தரவிட்டு இருந்தது இதன் அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க எனவும் பள்ளிகளில் 50% மாணவர்களை கொண்டு வகுப்புகளை நடத்தலாம் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் 50% மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க லாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது..
ஒரே நாளில் பள்ளிக்கு வராத மீதமுள்ள 50 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது யூடியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் பரிந்துரைகள் மீது வருகிற 11-ஆம் தேதி புதிய முடிவுகளை மத்திய அரசு அறிவிக்கும் இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் புதிய அறிவிப்புகள் வெளிவரலாம் ஊரடங்கு முடிந்த பின் ஜூன் 1-ஆம் தேதி நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews