திருப்பூர் நிச்சயம் எழுச்சி பெறும்! நம்பிக்கையூட்டும் மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 06، 2020

Comments:0

திருப்பூர் நிச்சயம் எழுச்சி பெறும்! நம்பிக்கையூட்டும் மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
:ஓவியம் மூலம், நாட்டின் தொழில் துறையும், பொருளாதாரமும் பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டெழும் என நம்பிக்கையூட்டுகிறார், திருப்பூர் மாணவி, மஞ்சு விகாசினி.திருப்பூர், நிப்ட்--டீ கல்லுாரியில். 2ம் ஆண்டு ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் படிக்கும் இம்மாணவி, தேசிய மரமான ஆலமரத்தை வரைந்துள்ளார்.
ஆலமரத்தின் தண்டு, வேர்பகுதிகளில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகளாவிய நாடுகளில், கரென்சியை குறிக்கும் குறியீடுகள் உள்ளன.மரத்தின் ஒவ்வொரு இலையிலும், நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பிரசித்திபெற்ற தொழில் துறையை குறிக்கும் வகையிலான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. திருப்பூர் டி--சர்ட், சூலுார் விமான படைத்தளம், சிவகாசி பட்டாசு உட்பட நாடுமுழுவதும் உள்ள பிரசித்திபெற்ற நகரங்கள், நடைபெறும் பிரதான தொழில்களை, மாணவி தத்ரூபமாக வரைந்துள்ளார். தனது ஓவியம் குறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவையே ஆலமரமாகவும், நாடுமுழுவதும் உள்ள தொழில் துறைகளை, இலைகளாக சித்தரித்து ஓவியம் வரைந்துள்ளேன். மரத்துக்கு வேர் மற்றும் தண்டு எவ்வளவு முக்கியமோ, அதுபோல் ஒரு நாட்டுக்கு அன்னிய செலாவணி அவசியமாகிறது.
அதனால், ஆலரத்தின் அடிப்பகுதியில், கரென்சி குறியீடு இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை சார்ந்துள்ளது என்பதை தெரிவிக்கும்வகையில், விழுதுகளை வடிவமைத்துள்ளேன். கொரோனா பாதிப்பு, விரைவில் நீங்கி, இந்த ஆலமரம் போன்று தொழில் துறையும், பொருளாதாரமும் எழுச்சி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة