بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، أبريل 08، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி போனதால், தேர்வு எழுத துடித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான, மாணவ, மாணவியர் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள், ஊரடங்கு உத்தவரால், மன உளச்சலுக்கு ஆளாகி, முடங்கி கிடக்கின்றனர்.மாணவர்களின் கல்வித் திறனை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.எனவே, தமிழக அரசு, இந்த கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களையும், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.மேலும், தொழிலாளர் வாழ்வாதாரத்திற்கு, அடிப்படையான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளானது மட்டுமின்றி, தொழில் முனைவோரும், பெரும் பாதிப்புகளை சந்திக்கும் நிலைமை உருவாகி வருகிறது.வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு, உதவித் தொகையாக, மாதம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க, மத்திய, மாநில அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.தொழில் துறை போலவே, வேளாண்மை தொழிலும், மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு, கொரோனாவில் இருந்து, முழுமையாக விடுபடும் வரையில், உதவித் தொகையாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வைகோ வலியுறுத்தல்!
Tags
# 1-10th
# CORONA
# EXAMS
# Politicians
Politicians
التسميات:
1-10th,
CORONA,
EXAMS,
Politicians
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.