தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أبريل 28، 2020

Comments:0

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கரோனா வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும். தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளன'' என்று தெரிவித்துள்ளார். கொரோனா இன்று உலகையே முழுவதும் முடக்கியுள்ள நிலையில் பள்ளி , கல்லூரிகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிய நிலையில் தொடர்கிறது.மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதன் பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.
அதில், பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவர் என்றும், பள்ளிகள் திறக்கும் போது மாணவ, மாணவியர்களுக்கு ஷூ, சாக்ஸ், பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 'தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் புத்திசாலிகளாக உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி தொகுதி, அளுக்குளி பஞ்சாயத்தில், 680 பேருக்கு அமைச்சர் செங்கோட்டையன், ஐந்து கிலோ அரிசி பைகளை வழங்கினார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் பணியாற்ற, விருப்பம் தெரிவித்து ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். வரும் கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலா, 50. நடுநிலைப்பள்ளிகள், 35, மற்றும் 30 துவக்கப்பள்ளிகளை தரம் உயர்த்த, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு தரம் உயர்த்திய பின், நடப்பாண்டில் அந்தந்த வகுப்பு வாரியாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். கொரோனா விலகியதற்கு பின், இதற்கான பணிகள் துவங்கும். அனைத்து வகுப்புக்கும், பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதேபோல், பள்ளி திறந்ததும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்க ஷூக்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மாணவர்களும் வீட்டில் உள்ளனர். இவர்கள் பாடம் சார்ந்த தகவல் தொடர்புக்காக, யூ-டியூப் மற்றும் கல்விச் சேனல் மூலமாக வழிகாட்டப்படுகின்றனர். தமிழகத்தின் பள்ளி மாணவர்கள், எந்த சூழ்நிலையிலும், எதற்கும் தயாராக உள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் புத்திசாலிகளாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة