Whatsappல் - தகவலை பகிர புதிய கட்டுப்பாடு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 07, 2020

Comments:0

Whatsappல் - தகவலை பகிர புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாட்ஸ்அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளை நம்புவதற்கும் வழிவகுக்கிறது. வாட்ஸ்அப் வதந்தியால் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும்படி தக்க நடவடிக்கைகளை எடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது.
இதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டு தகவல்களை சுட்டிக்காட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டது. எனினும் இது மத்தியரசிற்கு திருப்தி அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேம்படுத்தும் பணிகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வந்தது. அதன்படி, ஒரு தகவலை 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாத வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போதைய கொரோனா காலத்தில் நிறைய சமூக வலைத்தளங்கள் மூலம் போலி தகவல்களும் பரவி வருகிறது. அதனால், வாட்ஸ்அப்பில் அதிகமுறை ஃபார்வேர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் ஒருவருக்கு மட்டுமே அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. வாட்ஸப்பில் தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.
கொரோனா தொடர்பாக தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வாட்ஸப்பில் அதிகம் பகிரப்பட்ட தகவல்களை தறபோது ஐந்து பேருக்கு அனுப்ப முடியும். புதிய விதிமுறைப்படி இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என வாட்ஸப் நிறுவனம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews