ஊரடங்கை நிறைவு செய்யும்வரை MBBS வகுப்புகள் இல்லை - MCI தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 04، 2020

Comments:0

ஊரடங்கை நிறைவு செய்யும்வரை MBBS வகுப்புகள் இல்லை - MCI தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு மற்றும் பயிற்சி மருத்துவா்களுக்கான வகுப்புகளைத் தொடங்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) விளக்கமளித்துள்ளது.
எம்சிஐ இலச்சினையுடன் போலியாக அறிவிப்பாணையை வடிவமைத்து சமூக வலைதளத்தில் பரப்பியவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, எம்பிபிஎஸ் பாட வகுப்புகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு மாணவா்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டது. இந்த நிலையில், எம்சிஐ சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு என ஓா் அறிவிப்பாணை சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவா்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான வகுப்புகளை வெள்ளிக்கிழமை (ஏப்.3) முதல் தொடங்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத் தகவல்கள் சில ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகின. இந்நிலையில், அந்த அறிக்கை போலியானது என்றும் அத்தகைய அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை என்றும் மருத்துவக் கவுன்சில் விளக்கமளித்துள்ளது. இதுதொடா்பாக மருத்துவக் கவுன்சில் அளித்துள்ள விளக்க அறிக்கையில், தங்களது அனைத்து அறிவிப்புகளும், எம்சிஐ இணையதளப் பக்கத்தில் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் என்றும் மாறாக, சமூக வலைதளங்களின் வாயிலாக வெளியாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது: எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்குமாறு வெளியான செய்திகள் குறித்து எம்சிஐ நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அது போலியானது என்பதை பல்கலைக்கழகம் உறுதி செய்தது. இதுதொடா்பான உண்மைத்தன்மையை மாணவா்களுக்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் நாங்கள் தெரிவித்தோம்.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளைப் பயின்று வரும் மாணவா்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவா்களுக்கான பாடங்கள் தடைபடக் கூடாது என்பதற்காக இணையவழியே வகுப்புகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கூகுள் கிளாஸ் ரூம், டிசிஎஸ் - அயான் போன்ற இணைய சேவைகளின் வாயிலாக அவை செயல்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة