அச்சத்தில் இருக்கும் அண்ணா பல்கலை. பேராசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 18, 2020

Comments:0

அச்சத்தில் இருக்கும் அண்ணா பல்கலை. பேராசிரியர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையிலும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பேராசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்கள், பெரிய வணிக நிறுவனங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி வழக்கம் போல் நடைபெறுகிறது. போட்டித்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த ரிசர்வ் வங்கி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்ஜனியரிங் கல்லூரிகளுக்கான இணைப்பு அந்தஸ்து பணிகள் வழக்கம் போல் தொடரும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தற்போது வரை சுமார் 150க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள கல்லூரிகளுக்கும் இணைப்பு அந்தஸ்து வழங்கும் பணிகள் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு அந்தஸ்து பணிக்காக பேராசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் ஒரு வர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளையே முடங்கி கிடக்கின்றனர். ரயில்நிலையங்களில் கூட்டம் குறைந்துள்ளது. இப்படியான சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அளிக்காமல், பணிக்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது' இவ்வாறு தெரிவித்தார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews