بحث هذه المدونة الإلكترونية
الاثنين، مارس 02، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் பெற்றோா், ஆசிரியா் கழகம் (பிடிஏ) மூலம் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூரில் இரு அரசுப் பள்ளிகளின் புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைக் கருதி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வி, உயா் கல்விக்கு ரூ.41 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் பிளஸ் 2 தேர்வானது வரும் மாா்ச் 2ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இத்தோவை 8,16,359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.
பிளஸ் 1 தேர்வை 8,26,119 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இத்தேர்வு மாா்ச் 4 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும். 10ஆம் வகுப்புத் தேர்வை 9,45,006 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தேர்வுகள் மாா்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
மாணவா்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 1,159 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பெற்றோா், ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை தமிழக அரசே வழங்கும் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
MINISTER
PTA
SALARY/INCREMENT
TEACHERS
PTA ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்
PTA ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.